Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஜுலை 16, 2021 04:12

அரியலூர்: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து அரியலூர் காமராஜர் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களின் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக அக்கட்சியினர் ஒற்றுமைத்திடலில் இருந்து சைக்களில் ஊர்வலமாக சென்று பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். 

மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன் கண்டன உரையாற்றினார். மாவட்ட பொதுச்செயலர் சேகர், நகரதலைவர் சந்திரசேகர், வட்டாரதலைவர் சீனிவாசன், பழனிசாமி செய்தித்தொடர்பாளர் சிவக்குமார், உட்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர்.

தலைப்புச்செய்திகள்